35-40 வயதில் காதல் திருமணம் செய்வேன்: கெளதம் கார்த்திக்

அப்பாவின் அருமை பெருமைகள் குறித்து திரையுலகினர் நிறைய கூறிவருகிறார்கள்...
35-40 வயதில் காதல் திருமணம் செய்வேன்: கெளதம் கார்த்திக்

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கெளதம் கார்த்திக், சனா நடித்துள்ள படம், ரங்கூன். இப்படம் கடந்த வாரம் வெளியானது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கெளதம் கூறியதாவது:

கடல் படம் நடிப்பின் மீதான ஆர்வத்தைத் தொடங்கிவைத்தாலும் ரங்கூன் படம் தான் என் முதல் ஹிட். தற்போது சிப்பாய், இவன் தந்திரன், ஹரஹர மகா தேவகி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். 'நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்கிற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன். 

காதல் திருமணம் தான் செய்வேன். ஆனால் இப்போது அல்ல. 35-வது வயதில். 35-40 வயதில் திருமணம் செய்வதுதான் எனக்குச் சரியாக இருக்கும். 

அப்பாவின் அருமை பெருமைகள் குறித்து திரையுலகினர் நிறைய கூறிவருகிறார்கள். என் அப்பா (கார்த்திக்) மற்றும் தாத்தாவின் (முத்துராமன்) பழைய படங்களைப் பார்த்துவருகிறேன். நல்ல திரைக்கதைகளும் நல்ல இயக்குநர்களும் தன்னை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டுசெல்வார்கள். 

தமிழில் உருவாக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்று, அக்னி நட்சத்திரம். எனவே அதன் ரீமேக் நிகழ்ந்தால் அதில் நான் நடிக்கமாட்டேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com