மகேஷ் பாபுவுக்கு நன்றி தெரிவித்தார் சச்சின்... ஏன்?

பிரபலங்களுக்கிடையிலான நட்புணர்வை எளிதாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு மீடியமாகவும் சோஷியல் மீடியாக்கள் மாறி வருவது ஆரோக்கியமானதே
மகேஷ் பாபுவுக்கு நன்றி தெரிவித்தார் சச்சின்... ஏன்?

தெலுங்கு திரைப்பட உலகில் இளம் நடிகர்கள் தங்களுக்குள் மிகுந்த நட்புணர்வுடன் பழகிக் கொள்வார்கள் என்பது ஒரு பொதுவான கருத்து. அதே போல பட வெற்றிகளின் போதும் அவர்கள் தங்களிடையே ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளவும் தவறுவதில்லை. அப்படிப்பட்ட நட்புணர்வுடன் கூடிய நடிகர்களில் ஒருவர் தான் தெலுங்கு தேசம் கொண்டாடும் ஸ்டார்களில் ஒருவரான ப்ரின்ஸ் மகேஷ் பாபு. மகேஷ் தெலுங்கில் வெற்றிப் பட நாயகர்களில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர். ஆனாலும் அந்தப் பெருமைகளை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் சக நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதும் அவர் சோஷியல் மீடியாக்கள் வாயிலாக அவர்களைப் பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

பாராட்டுவது என்பதை தாண்டி பிற நடிகர்களுடன் நட்புணர்வுடன் பழகுவதையும் முதன்மையாக கருதியதால் மகேஷ் பிற நடிகர்களுடனான தனது புகைப்படங்களையும் ட்விட்டர் கணக்கில் அவ்வப்போது பதிவு செய்வார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்துடன் மகேஷுக்கு நெருக்கமான நட்பிருப்பதை அவர் ராம் சரண் தேஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளதைப் பார்த்தால் புரியும். சிரஞ்சீவி மட்டுமில்லை பவர் ஸ்டார் பவண் கல்யாணுடனும் மகேஷ்க்கு நல்ல நட்பு இருப்பதை பவனின் புதிய திரைப்படமான ‘கோமரம் புலி’ வெளியீட்டை ஒட்டி மகேஷ் வெளியிட்டிருக்கும் வாழ்த்துகளை வாசித்தால் புரியும்.

தனது  ‘ஸ்ரீமந்துடு’ திரைப்பட வெளியீட்டை ஒட்டி வெளியான  ‘பாகுபலி- 1’ திரைப்படத்துக்கும் மகேஷ் தனது வாழ்த்துகளையும் வரவேற்பையும் அழுத்தமாகவே பதிவு செய்திருந்தார். தற்போது வெளிவந்த பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனைகள் குறித்தும் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் சோஷியல் மீடியாக்களில் பதிவு செய்ய மகேஷ் தவறவில்லை. இப்படி  சினிமாத்துறையிலிருக்கும் தனது சக நண்பர்கள் மட்டும் தான் என்றில்லை மகேஷ் சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். 

சச்சினின் பயோபிக் திரைப்படமான ‘சச்சின் டென்டுல்கர்’ மே 26 ல் வெளியாக விருக்கிறது. அதையொட்டி மகேஷ் சச்சின் படம் வெற்றி பெற வாழ்த்தி தனது வரவேற்பை பதிவு செய்திருக்கிறார். பதிலுக்கு சச்சினும் மகேஷ் பாபுவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தார். சினிமாத்துறை சார்ந்த ஒருவருக்கும் விளையாட்டுத் துறை சார்ந்த ஒருவருக்குமான இந்த நட்புணர்வு மேலும் வளர வாழ்த்துகள். உலகம் முழுக்க பல லட்சக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட சச்சினுக்கு, மகேஷ் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர் வாழ்த்துச் சொல்லி நட்புணர்வை வெளிப்படுத்துவது என்பது இருவரது ரசிகர்களையும் சோஷியல் மீடியா மூலம் நட்புணர்வுடன் பழகிக் கொள்ள வழி வகுக்கும் ஒரு நல்ல மாற்றமாக கருதப்படுவதாக தெலுங்கு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

அந்த வகையில் பிரபலங்களுக்கிடையிலான நட்புணர்வை எளிதாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு மீடியமாகவும் சோஷியல் மீடியாக்கள் மாறி வருவது ஆரோக்கியமானதே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com