சமீபத்தில் திரைக்கு வந்துள்ள 'விழித்திரு' படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தனது டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.
அவர் கூறியது, ‘பணம்+அதிகாரம்-அன்பு=சமூகம்..விழிக்காத இச்சமூகத்திற்க்கு #விழித்திரு அவசியம்..அனைவரும் பார்க்கவேண்டிய படம்!!!! வாழ்த்துகள்!’ என்று பதிவிட்டுள்ளார்.
பெரும் போராட்டங்களுக்குப் பிறகு விழித்திரு படத்தை வெளியிட்டுள்ள இயக்குநர், தயாரிப்பாளர் மீரா கதிரவன், தரமான ஒரு படமாக உருவாக்கியுள்ளதால் அனைவரின் கவனத்தையும் பாராட்டினையும் பெற்று வருகிறார். டிவிட்டரில், பத்திரிகைகளில், சமூக வலைத்தளங்கள் என அனைத்து ஊடகங்களிலும் இத்திரைப்படத்திற்கு நேர்மறை விமரிசனங்கள் கிடைத்து வருகிறது.
திரை ஆர்வலர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமிது.