மெர்சல் தலைப்பு: மேல்முறையீடு தள்ளுபடி!

மெர்சல் படத்தலைப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது... 
மெர்சல் தலைப்பு: மேல்முறையீடு தள்ளுபடி!

மெர்சல் படத்தலைப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான். மெர்சல் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏஆர் பிலிம் பேக்டரி உரிமையாளரான ஏ.ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'எனது மகன் ஆரூத்தை வைத்து 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பில் படத்தை தயாரித்து வெளியிட கடந்த 2014 -ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். 'மெர்சல்' என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்தத் தலைப்பு நான் பதிவு செய்துள்ள 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பை ஒத்துள்ளது. இந்தத் தலைப்பில் படம் வெளியானால் எனக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே 'மெர்சல்' என்ற பெயரில் தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனமோ அல்லது அதன் உரிமையாளரோ, படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அக்டோபர் 6-ம் தேதி வரை 'மெர்சல்' என்ற பெயரில் படத்தை விளம்பரப்படுத்தவோ, படத்தை வெளியிடவோ இடைக்காலத் தடையை நீட்டித்து வழக்கை ஒத்திவைத்திருந்தார்.

தேனாண்டாள் ஸ்டுடியோ சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''மெர்சல்' என்ற தலைப்பும், 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பும் வெவ்வேறானவை. நாங்களும் இந்தப் படத்தின் தலைப்பை ஏற்கெனவே படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதுடன், பெரும் பொருள் செலவில் படத்தை எடுத்துள்ளோம். தற்போது பெயரை மாற்றினால் பெரும் இழப்பு ஏற்படும். எனவே, படத் தலைப்பைப் பயன்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, 'மெர்சல்' படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி, நீதிபதி அனிதா சும்ந்த் உத்தரவிட்டார்.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் தயாரிப்பாளர் ராஜேந்திரன். இந்நிலையில், மெர்சல் படத்தலைப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com