கலகலப்பு - 2 படத்திற்கான அறிவிப்பு வெளியானது! 

பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ஆம் வெளியான கலகலப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலகலப்பு - 2 படத்திற்கான அறிவிப்பு வெளியானது! 

சென்னை: பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ஆம் வெளியான கலகலப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கலகலப்பு. இந்தப் படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா மற்றும் சந்தானம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தற்பொழுது `சங்கமித்ரா' என்னும் பிரமாண்ட வரலாற்றுப் படத்தை சுந்தர்.சி இயக்கவிருந்த நிலையில், நடிகை சுருதி ஹாசன் படத்தில் இருந்து வெளியேறியதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் `கலகலப்பு' படத்தின் அடுத்த பாகத்திற்கான கதையை சுந்தர்.சி எழுதியிருக்கிறார்.

அத்துடன் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகையர் தேர்வும் தற்பொழுது நிறைவு பெற்றுள்ளது. அதன்படி `கலகலப்பு-2' படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸே தயாரிக்கிறது. `கலகலப்பு-2' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கிறது.

இந்த தகவல்களை இயக்குனர் சுந்தர்.சியின் மனைவியும் பிரபல நடிகையுமான நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com