மனத்தில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேசும் இயல்புடையவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த கபாலி அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
சமீபத்தில் அக்ஷய் குமாருடன் பாட்மேன் படத்தில் நடித்துள்ளார். அப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ராதிகா ஒரு செல்ஃபியை பதிவிட்டுள்ளார்.
அது நிஜ பல்லியா இல்லை பொம்மையா என்று தெரியவில்லை. ஆனால் இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராதிகா ஆப்தே என்ன சொன்னாலும் சர்ச்சை எதைச் செய்தாலும் வைரல் என்பது பாலிவுட் கணக்கு. அவ்வகையில் இந்தப் பல்லி செல்ஃபியும் இணைந்துவிட்டது.