நான்கு மாநிலங்களில் பத்மாவத் படத்தைத் திரையிட மாட்டோம்: மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்

சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில்...
நான்கு மாநிலங்களில் பத்மாவத் படத்தைத் திரையிட மாட்டோம்: மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்

பாலிவுட் இயக்குர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு தடைகளைக் கடந்து, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்த திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. 

சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. குர்கான், ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பேருந்து, இருசக்கர வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

இப்போராட்டங்களின் எதிரொலியாக, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் 'பத்மாவத்' படத்தை திரையிடமாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில், உள்ளூர் நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில், பத்மாவத் படத்தை திரையிடமாட்டோம் என்று இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சர்ச்சைக்கு தீர்வு காணப்படும் வரை, பத்மாவத் படம் திரையிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 75 சதவீத மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகங்கள், இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com