உருவானது முதல் சிக்கல்: பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு!

பிக் பாஸ் 2 படப்பிடிப்பில் பணிபுரியும் 75% ஊழியர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள். இது ஃபெப்சி அமைப்பின்...
உருவானது முதல் சிக்கல்: பிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, தனது முதல் பிரச்னையைச் சந்தித்துள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) உறுப்பினர்கள் மிகக்குறைவாக வேலை பார்ப்பதால், பிக் பாஸ் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று ஃபெப்சி அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. 

பிக் பாஸ் 2 படப்பிடிப்பில் பணிபுரியும் 75% ஊழியர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள். இது ஃபெப்சி அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது. கடந்த வருடமும் இதேபோல சிக்கல் ஏற்பட்டபோது, கமலிடம் ஃபெப்சி அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி 50% பெப்சி ஊழியர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணிபுரிந்தார்கள். ஆனால் அதே பிரச்னை இந்தமுறையும் தொடர்வதால் மீண்டும் போராட முடிவெடுத்துள்ளது ஃபெப்சி அமைப்பு.

ஃபெப்சி அமைப்பின் பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் ஒரு பேட்டியில் கூறியதாவது: வெள்ளிக்கிழமைக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டதால் நாங்கள் படப்பிடிப்பை நிறுத்தவில்லை. ஆனால் இதற்குப் பிறகும் அவர்களுடைய படப்பிடிப்பில் எங்களுடைய ஊழியர்கள் கணிசமாகப் பணிபுரியவில்லை என்றால், வரும் சனிக்கிழமை முதல் பிக் பாஸ் 2 படப்பிடிப்பை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஃபெப்சி அமைப்புடன் விஜய் டிவி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com