துப்பாக்கிச்சூட்டில் நற்பணி மன்ற நிர்வாகி மரணம்: தனுஷ் வேதனை!

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் தனுஷ் நற்பணி மற்ற நிர்வாகி ஒருவரும் மரணமடைந்துள்ளார்...
துப்பாக்கிச்சூட்டில் நற்பணி மன்ற நிர்வாகி மரணம்: தனுஷ் வேதனை!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 காவல்துறையினருக்குக் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் தனுஷ் நற்பணி மற்ற நிர்வாகி ஒருவரும் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்ததாவது: 

துப்பாக்கிச் சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பியின் குடும்பத்தினரைச் சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com