பிக் பாஸ் இறுதிச்சுற்றில் தமிழ்ப் பெண்: ரித்விகாவின் விருப்பம் நிறைவேறியது!

கடந்த வருடம் இறுதிச்சுற்றில் இடம்பெற்ற இருவரில் ஒரு பெண் கூட இல்லை. அப்படி ஒரு பெண் இறுதிச்சுற்றில் இடம்பெறும்போது...
பிக் பாஸ் இறுதிச்சுற்றில் தமிழ்ப் பெண்: ரித்விகாவின் விருப்பம் நிறைவேறியது!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இதற்கு நான்குப் பெண்கள் தகுதியடைந்துள்ளார்கள்.

கடந்த வார இறுதியில் பாலாஜி, யாஷிகா ஆகிய இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதையடுத்து ஜனினி, ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, விஜயலட்சுமி என நான்குப் பெண்களும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள். எந்த ஒரு மொழியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்றதில்லை. இதுவே முதல்முறை கமல் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கடைசி வாரத்துக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான போட்டியில் ஜனனி வென்று இறுதிச்சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றார் ஜனனி. இதர மூவரும் கடந்த வாரம் ரசிகர்களிடையே அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் தகுதியடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சமயத்தில், நடிகை ரித்விகாவுக்கு ஓர் ஆசை இருந்தது. 

கடந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் ஒரு பெண்ணும் தகுதி பெறவில்லை. கணேஷ் வெங்கட்ராம், ஹரிஷ் கல்யாண், சிநேகன், ஆரவ் ஆகிய ஆண்கள் மட்டுமே தகுதிபெற்றார்கள். சிநேகனை வீழ்த்தி ஆரவ் போட்டியை வென்றார். இந்நிலையில் இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் நிச்சயம் ஒரு பெண் இடம்பெறவேண்டும், அப்படி இடம்பெறும்பட்சத்தில் அவர் தமிழ்ப்பெண்ணாக இருக்கவேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார் ரித்விகா. 

ஜூலை 23 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இதுகுறித்து ரித்விகாவுக்கும் ஜனனிக்கும் இடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:

ரித்விகா: வீட்டுக்குள் வந்தபோது நான் யோசித்தது இதுதான். இறுதிச்சுற்றில் ஒரு பெண் கட்டாயம் வரவேண்டும்.  ஏனெனில் கடந்த வருடம் இறுதிச்சுற்றில் இடம்பெற்ற இருவரில் ஒரு பெண் கூட இல்லை. அப்படி ஒரு பெண் இறுதிச்சுற்றில் இடம்பெறும்போது அது ஏன் தமிழ்ப் பெண்ணாக இருக்கக்கூடாது?

ஜனனி: கண்டிப்பா

ரித்விகா: இது நம் ஊரில் நடக்கும் நிகழ்ச்சி. நான் அவர்களைத் தவறாகச் சொல்லவில்லை. அவர்களுக்கும் நிறைய திறமை உள்ளது.

ஜனனி: சினிமாவிலேயே தமிழ்ப்பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு.

ரித்விகா: எனக்கும் உண்டு.

ஜனனி: அந்த ஆதங்கத்தை பிக் பாஸிலாவது முறியடிக்க வேண்டும்...

*

ஒரு பெண் பிக் பாஸ் இறுதிச்சுற்றில் இடம்பெறவேண்டும், அவர் தமிழ்ப் பெண்ணாக இருக்கவேண்டும் என்கிற ரித்விகாவின் விருப்பம் தற்போது நிஜமாகியுள்ளது. இறுதிச்சுற்றில் ஒரு பெண்ணுக்குப் பதிலாக நான்குப் பெண்கள் தகுதியடைந்துள்ளார்கள். அவர்களில் ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி என மூன்று தமிழ்ப் பெண்கள் இறுதிச்சுற்றில் இடம்பெற்றுள்ளார்கள்.

இறுதி நாளன்று, பிக் பாஸ் மேடையில் கடைசி இருவரில் ஒருவராக ஐஸ்வர்யா தகுதி பெற்றாலும்கூட, இன்னொருவர் நிச்சயம் தமிழ்ப் பெண்ணாகத்தான் இருப்பார். எனவே ரித்விகாவின் விருப்பம் ரசிகர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றே இதன்மூலம் அறியலாம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com