தமிழக அரசின் புதிய ரியல் எஸ்டேட் விதிகள் என்னென்ன? 

மத்திய அரசால் இயற்றப்பட்ட கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) சட்டம், 2016-க்கு இணங்க மாநில அரசு உருவாக்கியுள்ள ..
தமிழக அரசின் புதிய ரியல் எஸ்டேட் விதிகள் என்னென்ன? 

மத்திய அரசால் இயற்றப்பட்ட கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) சட்டம், 2016-க்கு இணங்க மாநில அரசு உருவாக்கியுள்ள இதற்கான “தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள்-2017”-ஐ உருவாக்கி 22.06.2017 அன்று அறிவிக்கை செய்துள்ளது.

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி  அல்லது அவரது பிரதிதிநி , செயலாளர் வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் செயலாளர், சட்டத்துறை ஆகியோர் அடங்கிய தெரிவுக்குழு ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் மற்றும் குழுமம்/தீர்ப்பாயத்தின் இரண்டு உறுப்பினர்களை தெரிந்தெடுக்க உரிய பரிந்துரைகளை வழங்கும். அதுவரை இடைக்கால ஏற்பாடாக அரசு செயலாளர், வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அவர்கள் குழுமமாக செயல்படுவார்.

தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள், 2017-இன் முக்கிய கூறுகள் பின்வருமாறு:-

➢ 500 சதுரமீட்டர் நிலப்பரப்பளவு அல்லது எட்டு அலகுகளுக்கு மேல் உள்ள அனைத்து கட்டிட மனை விற்பனையில் ஈடுபடும் முகவர்கள் மற்றும் அத்தகைய  திட்டங்கள் குழுமத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

➢ இவ்விதிகள் நடந்தேறிவரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

➢ குழுமத்தில் பதிவு செய்யாமல் எந்தவொரு கட்டிட மனை விற்பனை செய்ய இயலாது.

➢ ஒதுக்கீட்டாளரிடமிருந்து திட்டத்திற்காக வசூலித்த 70 விழுக்காடு தொகையை திட்டத்திற்காக தனிக் கணக்கு துவக்கி வைப்பீடு செய்து அக்குறிப்பிட்ட திட்டம் மற்றும் கட்டிட செலவுக்கு அதனை பயன்படுத்த வேண்டும்.

➢ ஒவ்வொரு மேம்பாட்டாளர் தனது  திட்டத்திற்குண்டான நிலம் எவ்வித வில்லங்கமும் இல்லை என்பதற்கும் அந்நிலத்திற்குண்டான சட்டபூர்வமாக உரிமை பெற்றவர் என உறுதிமொழி பத்திரம் அளிப்பதுடன் அத் திட்டம் நிறைவு பெறும் காலத்தையும் குறிப்பிட்டு பிரமாண பத்திரத்தில் (Affidavit ) சான்றளிக்க வேண்டும்.

➢ எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் இல்லாமல் ஒதுக்கீட்டாளரிடமிருந்து திட்ட அலகின் மதிப்பீட்டில் 10 விழுக்காட்டிற்கு அதிகமாக பணம் பெறக் கூடாது. அப்பத்திரத்தில் அலகின் மொத்த மதிப்பினையும் குறிப்பிட்டு பெற வேண்டும்.

➢ ஒதுக்கீட்டாளர்களுக்கு அனைத்து அலகுகளும் கம்பள பரப்பளவு (carpet ) அடிப்படையில் விற்கப்பட வேண்டும்.

➢ மேம்பாட்டாளர்  திட்டத்திற்கான பணிநிறைவு சான்றிதழை உரிய அதிகாரிகளிடமிருந்து கட்டாயமாக பெற வேண்டும்.

➢ ஒதுக்கீட்டிற்குபின் ஐந்து வருட காலத்திற்குள் கட்டுமானத்திலோ, வேலைப்பாட்டிலோ, தரத்திலோ, சேவையிலோ ஏதேனும் குறைபாடு காணப்படின் அதனை மேம்பாட்டாளர் தனது சொந்த செலவில் 30 நாட்களுக்குள் நிவர்த்தி  செய்து தரவேண்டும்.

➢ இச்சட்டத்தின் கீழ் குழுமம் அல்லது தீர்ப்பாளரால் பிறப்பிக்கப்படும் முடிவுகள் செயலாணையால் பாதிக்கப்பட்ட எவர் ஒருவரும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம். அம்மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கொண்டிருக்கும். உறுப்பினர்களில் ஒருவர் நீதித்துறை சார்ந்த அலுவலராகவும் மற்றொருவர் நிர்வாகம் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த அலுவலராகவும் இருப்பார்.

➢ இச்சட்டத்தின் கீழ் பல்வேறு அபராதங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அபராதங்கள்  திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காடு அல்லது மூன்றாண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்படும்.

➢ பதிவு குறித்த தகவல்கள், திட்டத்தில் அமையப்பெறும் குடியிருப்புகளின் வகைப்பாடு அல்லது மனைகளின் விற்பனை விவரம், பெறப்பட்ட அனுமதிகள் போன்ற விவரங்கள் குழுமத்தின் இணையதளத்தில் மேம்பாட்டாளரால் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

செய்தி வெளியீடு எண்:395 நாள்: 24.06.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com