இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவி: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/ மாநகர ஆயுதப் படை)
காலியிடங்கள்: 5538
பதவி: இரண்டாம் நிலை சிறைக் காவலர்
காலியிடங்கள்: 365
பதவி: தீயணைப்போர்
காலியிடங்கள்: 237
மூன்று பதவிகளுக்கும் கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை ஒரு மொழிப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளுக்குள் தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ்த் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
உடல் தகுதி: ஆண்கள் குறைந்தது 170 செ.மீ. உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 159 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே அரசுப்பணியிலிருந்தால், அவர்கள் பணிபுரியும் அலுவலக தலைவருக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் விவரத்தினை தெரிவித்திட வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ. 130. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ, அஞ்சலகங்களில் இ-பேமண்ட் முறையிலோ செலுத்த வேண்டும். (அஞ்சலகங்களில் செலுத்த கடைசித் தேதி: 31-01-2018).
மேலும் விவரங்களுக்கு: http://www.tnusrbonline.org/pdfs/Notification%20CR%202017-18.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27-01-2018.