ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிவகங்கையை மாவட்டம் கந்தணியை சேர்ந்த இளையராஜா வீர மரணம் அடைந்தார். மேலும் மகாராஷ்டிராவை சேர்ந்த கவாய் சுமேத் வாமன் உள்பட 5 வீரர்களும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.