சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் கே.பழனிசாமி முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகள், முதல்வர் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.