சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி திருமதி.எஸ். ரமாதிலகம், திருமதி ஆர். தரணி, திரு. ஆர். ராஜமாணிக்கம், திருமதி டி. கிருஷ்ணவள்ளி, பெங்கியப்பன், திருமதி ஹோமலதா ஆகிய ஆறு பேரை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்தார். இவர்கள் 6 பேரும் நீதிபதியாக பதவியேற்றதையாடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.