ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கவும், பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்தி 4வது நாளாக சென்னையில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.