அலங்காநல்லூரில் தொடங்கிய தமிழின பண்பாட்டு உரிமை புரட்சி தமிழகம் எங்கும் வலுவாக மையம் கொண்டிருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தீவிரபோராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வைகையாற்று பாலத்தில் மதியம் வந்து கொண்டிருந்த கோவை - நாகர்கோவில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.