நாட்டின் 68வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் புடைசூழ குண்டு துளைக்காத வாகனத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், சிறப்பு விருந்தினரான அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது வந்தனர். தொடர்ந்து பீரங்கி குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியேற்றி ஏற்றினார். இதனை தொடர்ந்து முப்படை வீரர்கள் அணிவகுப்பும், நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறன.