இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு வெளிநாடுகளுடன் இணைந்து நம்நாட்டு வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் போர் ஒத்திகையில் ஈடுபடும் அமெரிக்கா, ஜப்பான் கப்பல்கள் சென்னை துறைமுகம் வந்தன. ஜப்பான் கடற்படை துணைத் தளபதி ஹிரோசி எமமுரா, அமெரிக்கா கடற்படை அதிகாரி வில்லியம் பைர்னே கை குலுக்கி நட்புப் பாராட்டும் விதமாக வரவேற்றார் இந்திய கடற்படை துணைத் தளபதி ஹெச்.சி.எஸ். பிஷ்ட். இந்நிலையில் இன்று முதல் மூன்று நாள் நடக்கும் இந்த பயிற்சியில் 3 நாட்டு வீரர்களும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றனர்.