தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.