புண்ணிய திருத்தலமான மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சென்று தனது ஆஸ்தான தெய்வமான ராகவேந்திரரை வணங்கினார். பிறகு அங்குள்ள கிராம தேவதையான மஞ்சாலம்மா கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, அவர், மடாதிபதி சுபுதீந்திராவை சந்தித்து ஆசிபெற்றார்.