கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் ஜவாஹர் லால் நேரு சாலையில் உள்ள 19 மாடிக் கட்டத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகமும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் இயங்கி வரும் நிலையில், கட்டடத்தின் 16-ஆவது தளத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கணினி கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டடத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை.