3 நாள் பயணமாக மியான்மர் நாட்டுக்கு சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகியுடன் இரு தரப்பு நாட்டு உறவுகள் குறித்தும், இரு நாடுகளுக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு, சுகாதாரம், தகவள் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யாங்கூன் நகரில் உள்ள காளி கோயிலுக்கு சென்று அங்கு தீப ஆராதனை செய்து வழிபட்ட மோடி தொடர்ந்து பகான் நகரில் உள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனந்தா கோயிலுக்கும் சென்றார். பிறகு முகலாய வம்சத்தின் கடைசி மன்னரான பகதூர் ஷா நினைவிடத்துக்கு சென்று மோடி மலரஞ்சலி செலுத்தினார்.