இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன், இந்திய ராணுவத்தின் அதிவேக சுகாய் 30 ஜெட் ரக போர் விமானத்தில் பறந்து ஆய்வு மேற்கொண்டார். புவியீர்ப்பு சக்திக்கு எதிராக பணியாற்ற வசதியாக ஜி-சூட் அணிந்த நிர்மலா சீதாராமன், ஆக்ஸிஜன் முகமூடி கொண்ட ஹெல்மெட்டையும் அணிந்து கொண்டு சுகோயில் பயணித்தார். இந்த விமானம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், மணிக்கு சுமார் 1350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.