திருவாரூர் வான்மீகபுரம் அம்மா அரங்கத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு, பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் சட்டபேரவைத் தலைவர் ப.தனபால், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.