ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. வயதானோர், பெண்கள், மற்றும் கைக்குழந்தையுடன் தாய்மார்கள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினரும் காலை முதலே வாக்குச்சாவடிகளில் திரண்டு வாக்களித்து வந்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்து வாக்கு சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு கொண்டு செல்லப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றது.