பெங்களூரு செல்லும் முன் சென்னை மெரினாவுக்கு வந்த சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் அமைதியாக நின்ற சசிகலா, மூன்று முறை வணங்கியும் எழுந்தவர் திடீரென சமாதியில் ஓங்கி அடித்து சபதம் ஏற்றார். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என அவர் சபதம் மேற்கொண்டார்.