காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிட்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் அவைத் தலைவர் மதுசூதனன், கோகுல இந்திரா, அமைச்சர் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் மாலையில் நீதி ஜெயிக்கும் என கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோர் பழரசம் அருந்தி முடித்துக் கொண்டனர்.