1953ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல்முறையாக வட கொரிய அதிபர் தென் கொரியா சென்றுள்ளார். தென் கொரியாவிற்கு சென்ற கிம் ஜாங் உன், வருகையாளர் பதிவேட்டில் 'புதிய வரலாறு தற்போது தொடங்கியுள்ளது. நாங்கள் தற்போது சமாதான காலத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம்' என்று பதிவு செய்து உள்ளார். இதுவே வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.