மாற்றம் என்பது மட்டுமே மாறாதது
(ஜனநாயக பாணியுடைய ஆசிரியர், சர்வாதிகாரிகள், அதிகாரத்துவபாணி உடையவர்கள், எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் என அறிவொளி வகைப்படுத்திய நான்கு பிரிவில் ஓர் ஆசிரியர் எந்த பிரிவில் அடங்குவார் என எப்படித் தெரிந்து கொள்வது என்று சந்தோஷ் கேட்டதற்கு அறிவொளி தன் பையிலிருந்த ஒரு தாளினை எடுத்து அவரிடம் தந்தார்)
அறிவொளி : சந்தோஷ், இந்தத் தாளில் உள்ள கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லைன்னு பதில் எழுதிக்கிட்டே வந்தீங்கன்னா கடைசியிலே நீங்க எப்படிப்பட்ட ஆசிரியர்னு உங்களுக்கு தெரிஞ்சிடும்.
சந்தோஷ் : ஓ அப்படியா! குடுங்க, என்னை நானே சுய ஆய்வு பண்ண இது உதவும்.
(தாளை வாங்கிய சந்தோஷ் கேள்விகளை கவனமாகப் படித்து பதிலளிக்க ஆரம்பித்தார்.)
(எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்துவிட்டுத் தாளை அறிவொளியிடம் நீட்டினார் சந்தோஷ் .)
சந்தோஷ் : சார் முடிச்சிட்டேன், இதுக்கான சரியான பதிலை சொல்லுங்க சார், நான் என்னவிதமான ஆசிரியர்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.
அறிவொளி : ஓ! அதுல சந்தேகம் இருக்கா உங்களுக்கு! நீங்க ஜனநாயக பாணி ஆசிரியராதான் இருப்பீங்க.
(சரியான விடை இருந்த ஓரு தாளை எடுத்து சந்தோஷிடம் தந்தார் அறிவொளி.)
இந்தாங்க, இந்த பேப்பர்ல இருக்கும் பதில்களைக் கொண்டு அதை நீங்க உறுதி செய்திக்கலாம். இதில் ஓவ்வொரு வகை ஆசிரியர்களுக்கான கேள்விகளின் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். எதற்கு அதிகமான ஆம் என்று பதில் சொல்லியிருக்கிறீர்களோ அந்த வகை ஆசிரியர் நீங்கள்.
ஜனநாயகபாணி - 1, 5,12,18, 20, 21, 22, 23, 24, 31, 34, 37, 42, 43, 46, 48.
சர்வாதிகார பாணி - 2, 3, 8, 9, 10, 16,17, 30, 32, 35, 40, 41, 44, 47.
அதிகாரத்துவ பாணி - 4, 7,13, 14, 19, 27, 28, 29, 33, 50.
எதற்கும் அசையாதவர்கள் - 6, 11, 15, 25, 26, 36, 38, 39, 45, 49.
(தன் கணவரின் கையிலுள்ள தாளைக் கவனமுடன் பார்த்துக் கொண்டிருந்தார் எழில்.)
அறிவொளி : என்ன உங்க கணவர் எந்த வகை ஆசிரியர்னு கண்டுபிடிச்சுட்டீங்களாம்மா?
எழில் : நீங்க சொன்ன மாதிரியே அவர் ஜனநாயக பாணி உடையவர் தான் சார். எங்கப்பாவுடைய மாணவராச்சே, அவரை மாதிரித் தானே இவரும் இருப்பார்.
அறிவொளி : ஆமாம் அதுமட்டுமில்லாம தன்னுடைய மாணவர்களையும் நல்ல குடிமக்களா உருவாக்கிட்டிருக்கும் மிகச் சிறந்த ஆசிரியர் உங்க கணவர்.
(பெருமையுடன் தன் கணவரைப் பார்த்து புன்னகைத்தாள் எழில்.)
சரி நேரமாச்சு நான் கிளம்பறேம்மா. நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம் சந்தோஷ்.
[பெயருக்கேற்றாற்போல் அறிவுடைய, அதே சமயம் அகந்தையற்ற அறிவொளி போன்ற தலைமை ஆசிரியரும், பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டே இயங்கும் சந்தோஷ் போன்ற ஆசிரியர்களும் ஓவ்வொரு பள்ளியிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இதற்கு மாறாக நம் பள்ளிகளில் இப்போது இருக்கும் நிலை மாறுமா என்று நம் மனதில் ஏக்கம் பிறக்கிறதல்லவா! மாறும்... நிச்சயம் மாறும் .மாற்றம் என்பது மட்டுமே மாறாதது.)
தொடரும்...
பிரியசகி
priyasahi20673@gmail.com