இன்றைய மருத்துவ சிந்தனை: ஆரைக் கீரை

அற்புதமான நினைவாற்றல் பெறலாம்
இன்றைய மருத்துவ சிந்தனை: ஆரைக் கீரை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


ஆரைக் கீரை:

  • ஆரைக் கீரைச் சாறு எடுத்து , தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மி.லி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • ஆரைக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் இஞ்சியை (ஒரு துண்டு) சேர்த்து அரைத்து குடித்து வந்தால் பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
  • ஆரைக் கீரைச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்துப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் தேமல் , படை , கரும் படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
  • ஆரைக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இரு வேளையும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
  • ஆரைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து  , உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த நோய் குணமாகும்.
  • ஆரைக் கீரை , தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து அதனுடன் ஏலக்காயைத் (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
  • ஆரைக் கீரையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் அற்புதமான நினைவாற்றல் பெறலாம்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com