ஆரைக் கீரைச் சாறு எடுத்து , தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மி.லி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
ஆரைக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் இஞ்சியை (ஒரு துண்டு) சேர்த்து அரைத்து குடித்து வந்தால் பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
ஆரைக் கீரைச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்துப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் தேமல் , படை , கரும் படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
ஆரைக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இரு வேளையும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
ஆரைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து , உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த நோய் குணமாகும்.
ஆரைக் கீரை , தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து அதனுடன் ஏலக்காயைத் (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
ஆரைக் கீரையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் அற்புதமான நினைவாற்றல் பெறலாம்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com