இன்றைய மருத்துவ சிந்தனை நாவல் மரம்

நாவல் கொட்டை, தேற்றான் கொட்டை  இவை இரண்டையும்  சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால்
இன்றைய மருத்துவ சிந்தனை நாவல் மரம்

நாவல் கொட்டை, தேற்றான் கொட்டை  இவை இரண்டையும்  சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உள் மூலம் , கீழ் மூலம் , ரத்த மூலம் போன்றவை குணமாகும்.

நாவல் பருப்பு, சீரகம் இவை இரண்டையும் சம அளவு  எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால்  ரத்த அழுத்தம் குணமாகும்.

நாவல் கொட்டை, சிறுகுறிஞ்சான், வெந்தயம், மாம்பருப்பு ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும்  மூன்று கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால்  சர்க்கரை நோய் குணமாகும்.

நாவல் இலைத் துளிரை (ஒரு கைப்பிடி) எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும்.

நாவல் பழக் கொட்டைகளை (10) இடித்து 150 மில்லி தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி , அந்தத் தண்ணீரை தினமும் இரு வேளையும் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

நாவல் பழத்தை மாதவிலக்கு  வருவதற்கு ஒரு வாரம் முன் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு தள்ளிபோகும்.

நாவல் மர இலையை(5) தண்ணீரில் (அரை லிட்டர்) போட்டுக் கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் வாய்ப் புண் , வாய் வேக்காடு போன்றவை குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com