கொத்தமல்லி விதையை பனை வெல்லம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு படபடப்பு, மயக்கம் தீரும்.
வேப்பம் பூவுடன் ஆவாரம் பூ சம அளவு சேர்த்து , அவற்றுடன் 5 சிட்டிகை மஞ்சள் தூள், மிளகு(5) ஆகியவற்றையும் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.இதய நோயால் ஏற்படும் படபடப்பு, மயக்கம் போன்றவை குணமாகும்.
செம்பருத்திப்பூவுடன் (10), ஒரு டம்ளர் நீர், மிளகு(5), ஏலக்காய் (2) ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்துவந்தால். நெஞ்சு படபடப்பு, நெஞ்சு வலி, இதய வால்வுகளில் அடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
உத்தாமணி இலையைச் சாறு எடுத்து அதை ஒரு துணியில் நனைத்து நெஞ்சு வலி உள்ள இடத்தில் கட்டுப்போட்டால் வலி உடனே குறையும்.
புதினா இலைச் சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிக் குடித்து வந்தால், வாயுக் கோளாறுகள், நெஞ்சு பாரமாக இருப்பது போன்ற உணர்வு, நெஞ்சு வலி போன்றவை சரியாகும்.
கொத்தமல்லி இலையுடன் சம அளவு இஞ்சி சேர்த்து அரைத்து ,அதில் கொட்டைப்பாக்கு அளவுக்கு எடுத்து காலை, மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் மயக்கம், வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் நெஞ்சு படபடப்பு போன்ற பிரச்சனைகள் தீரும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com