முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தடைபட்ட மற்றும் தாமதித்த மாதவிலக்கு குணமாகும்.
முடக்கத்தான் கீரையுடன் கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் மூல நோய்கள் குணமாகும்.
முடக்கத்தான் கீரைச் சாற்றில் மஞ்சள் தூள் (சிறிதளவு) கலந்து சொரி, படை , சிரங்குகள் மீது பூசினால் குணம் பெறலாம்.
முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து அவற்றோடு பூண்டு(2பல்),மஞ்சள் தூள்(2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான மூட்டு வலிகளும் குணமாகும்.
முடக்கத்தான் கீரையுடன் சிறிது வாய்விளங்கத்தைச் சேர்த்து அரைத்து, இரவு உணவுக்குப் பிறகு நெல்லிக்காய் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
முடக்கத்தான் கீரையில் சாறு எடுத்து லேசாகச் சூடுபடுத்தி காதில் சில துளிகளை விட்டால் காது வலி குணமாகும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா, இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com