கல்யாண முருங்கை , முருங்கை இலை ,மிளகு , பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.
கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால், அதிகாலையில் மலம் தாராளமாக வெளியேறும்.
கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
கல்யாண முருங்கை இலையுடன், ஊறவைத்த வெந்தயத்தை ஓரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச் சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.
கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா, இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com