சுக்காங் கீரையுடன் வேப்பிலை(3), மஞ்சள் (சிறிதளவு) இவை இரண்டையும் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
சுக்காங் கீரை, துத்திக் கீரை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து , பாலில் கலந்து குடித்து வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
சுக்காங் கீரையை சாறு எடுத்து அந்த சாற்றில் கடுக்காய்த் தோலை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் அனைத்தும் குணமாகும்.
சுக்காங் கீரைச் சாற்றில் பெருங்காயம் (சிறிதளவு), எலுமிச்சைச் சாறு (சிறிதளவு) சேர்த்துக் குடித்தால் வயிற்று வலி குணமாகும்.
சுக்காங் கீரையுடன் சிறிது ஒமம், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
சுக்காங் கீரையைப் பருப்பு போட்டுக் கடைந்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
சுக்காங் கீரை (ஒரு கைப்பிடி), சீரகம் (2ஸ்பூன்) , சிறிய வெங்காயம் (ஒன்று), எலுமிச்சைச் சாறு (சிறிதளவு) இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்/ Foot
and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com