கசகசாவை (10 கிராம்), மாதுளம் பழச்சாற்றில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
கசகசா, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக்கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
கசகசா, முந்திரிப்பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும். முகம் அழகு பெறும்.
கசகசா, துத்தி இலை இவை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கால் மூட்டுகளில் பற்றுப்போட்டால், மூட்டுவலி உடனே குணமாகும்.
கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் இவை அனைத்தையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
கசகசா, ஜவ்வரிசி, பார்லி இவை மூன்றையும் தலா 10 கிராம் எடுத்து , பச்சரிசியுடன் (100 கிராம்) சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால் இடுப்பு வலி குணமாகும்.
கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் குணமாகும்
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609