வாய்ப் புண் குணமாக மாசிக்காயைப் பொடி (1ஸ்பூன்) எடுத்து வெந்நீரில் போட்டு பத்து நிமிடம் சென்ற பின்னர் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
அதிக இரத்தப்போக்கு நிற்க மாசிக்காயை பொடி செய்து அதனை (1கிராம்) அளவு தினமும் மூன்று வேளை சுடுநீருடன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப் போக்கினை கட்டுப்படுத்தும்.
வெள்ளைப் படுதல் குணமாக மாசிக் காயைப் பொடித்து (50கிராம்) எடுத்து (800மில்லி)நீருடன் கலந்து பத்து நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை (30 மில்லி)முதல் (60 மில்லி) வீதம் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலும், நாட்பட்ட இருமல் போன்றவை குணமாகும்.
மாசிக்காய் பொடியுடன் (சிறிதளவு) , பனங்கற்கண்டு (1ஸ்பூன்) சேர்க்கவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து குடித்துவந்தால் வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்.
முகப்பரு மறைய மாசிக்காய் பொடி (சிறிதளவு) , சாதிக்காய் பொடி (சிறிதளவு) , எலுமிச்சம் பழம் சாறு (சிறிதளவு) இவை மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை இரவு நேரத்தில் முகப்பருவின் மீது பூசி பின்பு காலையில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மறையும்.
மூலம் குணமாக ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் (250 மில்லி) அளவு ஊற்றி இதனுடன் சிறிதளவுஅகத்தி கீரையை போட்டு வதக்கவும். கீரை நன்றாகப் பொறிந்ததும் அதனுடன் மாசிக்காய் பொடி(2ஸ்பூன்) சேர்க்கவும். இந்த தைலத்தை வடிக்கட்டி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதை மேல்பூச்சாக ஆசனவாயில் பயன்படுத்தும்போது, மூலம் சரியாகும். மூலத்தை சுருக்கி இயற்கை நிலைக்கு கொண்டுவரும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com