காய்ச்சல் ,சளி , இருமல் குணமாக பவளமல்லி இலைகள் (5) எடுத்து நீர்விட்டு நன்றாக அலசி இதனுடன் சிறிது இஞ்சி தட்டி போடவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவந்தால் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் குணமாகும் . சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
மூட்டு வலி குணமாக பவளமல்லி இலைகள் (5) எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி ஒரு செம்பு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் தேனுக்கு பதிலாக சீரகம் அல்லது மிளகு சேர்க்கலாம். இந்த தேனீரை காலை, மாலை என இரு வேளையும் தலா 50 மில்லி அளவுக்கு குடித்துவந்தால் மூட்டு வலி குணமாகும்.
வயிற்று புழுக்கள் நீங்க பவளமல்லி இலைசாறு ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சிறிது உப்பு சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை என 3 வாரம் இதை குடித்து வந்தால் வயிற்று புழுக்கள் வெளியேறும். கீரி பூச்சிகள், நாடா புழுக்கள், நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புதமான மருந்தாகிறது. வயிற்றை சுத்தப்படுத்தும் மூலிகையாக பயன்படுகிறது.
முதுகு வலி குணமாக பவள மல்லி இலையைச் (5) எடுத்து சுடுநீரில் போட்டு நன்றாக ஊறவைத்து தினந்தோறும் காலை மாலை என இரு வேளையும் தலா 50 மில்லி அளவுக்கு குடித்து வந்தால் முதுகுவலி மறையும்.
பல் ஈறு வலி குணமாக பவளமல்லி மரத்தின் வேரை சிறிதளவு எடுத்து மென்றுதின்று வந்தால் பல் ஈறுகளில் உண்டாகும் வலியை குணப்படுத்தும்.
வழுக்கை தலையில் முடி வளர பவள மல்லி விதையை பொடி
(10கிராம் ) எடுத்து சிறிது எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடியும் வளரும்!
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com