முருங்கைப் பூவுடன் (ஒரு கைப்பிடி) பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தினந்தோறும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் வீதம் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி , பித்த தன்மை அதிகமானால் ஏற்படும் தலைவலி போன்றவை குணமாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து அதனால் ஏற்படும் நரம்பு தளர்ச்சி ஆகியவை குணமாகும்.
முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் சில பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி போன்ற பிரச்சனைகள் குறையும்.
முருங்கைப் பூவை (ஒரு கைப்பிடி) எடுத்து சுத்தமாக ஆய்ந்து நன்றாக கழுவி பசும் பாலில் போட்டுக் காய்ச்சி கற்கண்டு தூள் போட்டுக் கலக்கி மாலை 6 மணிக்கு சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெற்று விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com