உலர்திராட்சையுடன் (10) , பெருஞ்சீரகம் (2 ஸ்பூன்) சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை(10) பாலில் கலந்து கொதிக்க வைத்து தினந்தோறும் பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
உலர் திராட்சையை (10) நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வயிற்று வலி மறைந்து போகும்.
உலர்ந்த திராட்சைப் பழங்களை(10) நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு உண்டாகும் குடல் புண்கள் குணமாகும்.
தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.
உலர்திராட்சைப் பழங்களை (25) தொடர்ந்து 21 நாட்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் மூல நோய்களில் இருந்து குணம் பெறலாம்.
உலர் திராட்சை பழங்களை (20) சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் இரவு படுக்க போகும் முன் குடித்து வந்தால் தொண்டைக்கட்டு பிரச்சனை விரைவில் குணமாகும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com