ரத்தசோகைக்கு கேரட், பீட்ரூட், முட்டை கோஸ் மற்றும் தக்காளி சாப்பிடலாம்.
ஆஸ்துமாவுக்கு தேன், கேரட், அன்னாசிப்பழம் உண்ணலாம்.
நீரிழிவுக்கு முளைவிட்ட சிறுதானியங்கள், பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி சாப்பிடலாம்.
வயிற்றுப்புண்ணுக்கு கேரட் மற்றும் பூசணி சாப்பிடலாம்.
இதய நோய்க்கு ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப்பழம், மாதுளை சாப்பிடலாம்.
கொழுப்பு குறைய கொள்ளு மற்றும் கேரட் நிறைய சாப்பிடலாம்.
சளித் தொல்லைக்கு துளசி இலைச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச்சாறு சாப்பிடலாம்.
முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்து உண்ண வாய் கசப்பு குணமாகும்.
புளியந்தளிரை துவையலாக்கி உண்ண வயிற்று மந்தம் தீரும்.
பிரண்டைத் துவையல் செரியாமையை நீக்கி பசியைத் தூண்டும்.
நாள்தோறும் ஒரு பப்பாளித் துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
(‘என்ன சாப்பிடலாம் ?' என்ற நூலிலிருந்து நெ.இராமன்)