வயிற்றுப் புண் குணமாக வெள்ளரிக்காய் நறுக்கி சாறு எடுத்து வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை அரைடம்ளர் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தி வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
உயர் ரத்த அழுத்தம் குறைய தினந்தோறும் இரண்டு வெள்ளரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
உடல் பருமன் , ஊளைச் சதை குறைய வெள்ளரிக்காய் , வெள்ளை வெங்காயம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாறு எடுத்து அவற்றை சாறு பிழிந்து காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் , ஊளைச் சதை குறையும்.
சிறுநீரகக் கற்கள் கரைய வெள்ளரிகாய் , முள்ளங்கி , வாழைத்தண்டு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாறு எடுத்துக் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும் . நீர் அடைப்பு , நீர்க் கட்டு போன்ற குறைபாடுகள் நீங்கும்.
முடி நன்கு வளர முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், சல்ஃபரும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. வெள்ளரிக்காய் சாற்றுடன் காரட்சாறு (2 ஸ்பூன்) , பசலைக்கீரைச்சாறு (2 ஸ்பூன்) , போன்றவற்றையும் சேர்த்து குடித்து வந்தால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில்தான் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துவும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசி வந்தால் முகம் அழகு பெறும்.முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாகும் . பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றி வந்தால் முகம் அழகு பெறும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com