உடல் சூடு , வயிற்று வலி மறைய சீரகத்தைப் பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டால் உண்டாகும் வயிற்று வலி குணமாகும்.
பித்தம் குறைய, இளநரை மறைய சீரகத்தை கரும்புச்சாற்றில் ஊறவைத்து , காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , பித்தம் குறையும் , இளநரை மறையும்.
நன்றாகத் தூக்கம் வர சீரகம் , ஒமம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இரவு படுக்கப் போகும் முன் குளித்து விட்டு படுத்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
குளிர்க் காய்ச்சல் உடனே குணமாக சீரகம் , குருந்தொட்டி வேர் இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு கஷாயமாக காய்ச்சி மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து குடித்தால் குளிர்க் காய்ச்சல் உடனே குணமாகும்.
உடல் பருமன் குறைய சீரகம் , சோம்பு , வாய்விளங்கம் , ரோஜாப்பூ இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும் , இதில் காலை மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , உடல் பருமன் குறையும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com