இன்றைய மருத்துவ சிந்தனை: செவ்வாழை

குழந்தைப் பேறு உண்டாக
இன்றைய மருத்துவ சிந்தனை: செவ்வாழை


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


செவ்வாழை:

  • மாலைக்கண் நோய் நீங்க மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால்  மாலைக்கண்நோய் குணமாகும்.
  • பல் வலி , பல்லசைவு நீங்க பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 21 நாட்களுக்கு  சாப்பிட்டு வந்தால்  ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
  • சொறி , சிரங்கு , சரும வியாதி மறைய செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு மருந்து போடாவிட்டாலும்  சருமநோய்கள் அனைத்தும் குணமடையும்.
  • நரம்புத் தளர்ச்சி குணமடைய தினந்தோறும்  இரவு ஒரு செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால்  நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
  • குழந்தைப் பேறு உண்டாக குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும் .இவ்வாறு  தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக கருத்தரிக்கும்.
  • தொற்று நோய் வராமல் தடுக்க செவ்வாழை பழத்திற்கு
  • தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி உள்ளது. ஆகையால் வாரம் இருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும். ஆரோக்கியம் மேம்படும்.
     

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com