மாலைக்கண் நோய் நீங்க மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண்நோய் குணமாகும்.
பல் வலி , பல்லசைவு நீங்க பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொறி , சிரங்கு , சரும வியாதி மறைய செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு மருந்து போடாவிட்டாலும் சருமநோய்கள் அனைத்தும் குணமடையும்.
நரம்புத் தளர்ச்சி குணமடைய தினந்தோறும் இரவு ஒரு செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தைப் பேறு உண்டாக குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும் .இவ்வாறு தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக கருத்தரிக்கும்.
தொற்று நோய் வராமல் தடுக்க செவ்வாழை பழத்திற்கு
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி உள்ளது. ஆகையால் வாரம் இருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும். ஆரோக்கியம் மேம்படும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com