சர்க்கரை நோயிலிருந்து விடுபட அவுரி இலையை சாறு எடுத்து அவற்றில் வெந்தயத்தை ஊறவைத்துக் காயவைத்துப் பொடி செய்து ,தினமும் காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
தலைமுடி செளிப்பாக வளர அவுரி இலை , கரிசாலை , கறிவேப்பிலை இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் மூன்று வேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் தலைமுடி செழிப்பாக வளரும்.
மூட்டுவாதம் , மூட்டு வலியிலிருந்து விடுபட அவுரி இலை , வாதநாராயணன் இலை , பூண்டு , மிளகு இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வாதம் , மூட்டு வீக்கம் போன்றவை குணமாகும்.
அவுரி இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுத்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.
தோல் நோய்களிலிருந்து விடுபட அவுரி இலையை (5) , மிளகுடன் (5) இவை இரண்டையும் அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
பச்சிளம் குழந்தை மலச்சிக்கல் தீர அவுரி இலை சிறிதளவு எடுத்து அரைத்து விளக்கெண்ணையுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவி வந்தால் பச்சிளம் குழந்தைகளின் மலச்சிக்கல் விலகி தாராளமாக மலம் வெளியாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com