இரத்தச் சோகை குணமாக செம்பருத்தி பூவை காயவைத்து அரைத்து (100 கிராம்) , மருதம் பட்டைத் தூள் (100 கிராம்) இரண்டையும் ஒன்றாகக் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.
சிறுநீர் எரிச்சல் குணமாக செம்பருத்திப் பூ (10 இதழ்களை) நீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து காய்ச்சி வைத்துக்கொண்டு அந்த நீரை கொஞாசம் கொஞாசமாக குடித்து வந்தால் சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்
தலைச் சுற்றல் , மயக்கம் குணமாக செம்பருத்திப் பூவுடன் (2) , சீரகம் (சிறிதளவு) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் பித்தத்தினால் வரக்கூடிய மயக்கம் , தலைச்சுற்றல் , ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
இரத்தம் சுத்தம் அடைய செம்பருத்திப் பூவுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் ரத்தச் சுத்தி உண்டாகும். தோல் நோய்களும் குணமாகும்.
பேன், பொடுகுத் தொல்லை தீர செம்பருத்திப் பூக்களை எடுத்து இரவு படுக்கும் போது தலையில் வைத்துப் படுத்துக் கொண்டால் பேன், பொடுகுத் தொல்லை தீரும்.
மாதவிடாய் வயிற்று வலி குணமாக செம்பருத்தி மொட்டை எடுத்து மாதவிடாய் நாட்களில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
மாதவிலக்கு ஒழுங்காக செம்பருத்திப் பூக்களை (3) ,எலுமிச்சம் பழத் தோலுடன் அரைத்து காலை வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு ஒழுங்காகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist