ஃபேஸ்புக்கிற்கு அடிமையாக இருக்கும் காதலியை எப்படி மீட்பது என்று சில இளைஞர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் (வேறெங்கே அதே ஃபேஸ்புக்கில் தான்) அவற்றின் சுவாரஸ்யமான தொகுப்பு :
தனது காதலிக்கு பேஸ் புக்கில் நிறைய நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக ஆண்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வு தோன்றுமாம். யார் இவன் எதற்கு உனக்கு லைக் போடுகிறான் என்று ஆரம்பித்து தரமணி பட ஹீரோவைப் போல் பல கேள்விகள் கேட்கத் தொடங்குவார்கள். என்னுடன் பேசும் நேரத்தை விட உன் நண்பர்களுடன் அரட்டையடிக்கும் நேரம் தான் அதிகம் என்று மனம் வேதனைப்படுவார்கள். மேலும் சாட் செய்யும் போது மேசேஜ் தாமதமாக வந்தால், இந்த இடைப்பட்ட நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டிருப்பார் என்ற எண்ணம் தான் தோன்றும்! இதனால் எத்தனை அன்புள்ளவர்களாக இருந்தாலும் கூட அந்த சூழ்நிலையில் ஃபோனை அல்லது கணினியை ஆஃப் செய்துவிடுவார்கள். (வேறு எதற்கு நேரடியாகப் போய் ஒரு கை பார்த்துவிடலாம் என்றுதான்)
காதலர்களுக்குள் நடக்கும் பர்சனல் விஷயங்கள், புகைப்படங்களை எல்லாம் கூட நண்பர்களிடம் இருந்து லைக் வாங்குவதற்காக பேஸ்புக்கில் போடும் போது, நமக்குள் எந்த ஒரு விஷயமும் பர்சனாலாக இல்லையா? என்ற எண்ணம் தோன்றும். உங்களிடையே உள்ள இடைவெளி குறையும் என்கிறது ஒரு க்ரூப். இரவு எல்லாம் தூங்காமல், இன்னும் பேஸ் புக்கில் அப்படி என்ன தான் வேலை? என்று மனம் குமைந்து போகும் எண்ணங்கள் தொடர்ந்தால் மன அழுத்தம் ஏற்படும்.
பொழுதுபோக்க பயன்படும் ஃபேஸ்புக் உங்கள் வாழ்க்கையை பழுதடையச் செய்துவிடலாம். கவனமாக கையாளும் போது அதுவே உறவுப் பாலமாகிவிடும். அன்பின் இருப்பிடங்கள் எத்தனை எத்தனையோ அதில் மெய் நிகர் உலகமும் ஒன்றுதானே?