jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு இந்தியா

26 ஆண்டுகளுக்குப் பிறகு.. பேரறிவாளனுக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஒரு துருப்புச்சீட்டு

By DIN  |   Published on : 15th November 2017 04:20 PM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

Perarivalan

 

புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்ததை ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி உச்ச நீதிமன்றத்தில்  ஒப்புக் கொண்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளுள் ஒருவரான தியாகராஜன் (ஓய்வு) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், 19 வயதாக இருந்த ஏ.ஜி. பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு பகுதியை தான் பதிவு செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். 

அதாவது,  அறிவு என்று அழைக்கப்படும் பேரறிவாளன், 9 வோல்டுகள் கொண்ட இரண்டு பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தபோது, அவை எதற்காக என்று தனக்குத் தெரியாது என்று கூறியிருந்ததை, தான் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது சேர்க்காமல் விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பேட்டரிகள் எதற்காக வாங்கப்படுகிறது என்பது பேரறிவாளனுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால், வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது அதனை நான் விட்டுவிட்டேன். ஏன் என்றால், அதை பதிவு செய்தால், அது குற்றமிழைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் சாட்சியமாக மாறிவிடும். ஆனால் நான் பதிவு செய்வது குற்ற ஒப்புதல் வாக்குமூலம். எனவே ஒட்டுமொத்த வாக்குமூலமும் பயனற்றதாகப் போய்விடும் என்பதால் அந்த பகுதியை நீக்கிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது பயன்படுத்திய வெடிகுண்டுகளை இயக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை முடியும் வரை, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்குமாறு பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில், பேரறிவாளன் மீதான தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து மத்திய அரசிடம், 2 வார காலத்துக்குள் பதில் கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

ராமதாஸ் கருத்து

இந்த வழக்கு பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்ததை சிபிஐ முன்னாள் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பேரறிவாளன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு. சிறைக்கதவு நிரந்தரமாக திறக்கட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது மகன் பேரறிவாளன் பொங்கலுக்குள் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியின் பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அதுதொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், 2 பேட்டரி வாங்கிக் கொடுத்தது தனக்கு தெரியாது என பேரறிவாளன் கூறியதைப் பதிவு செய்ய மறந்து விட்டதாகவும், அதுதொடர்பான மொழி பெயர்ப்பு பல அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

இதுவே தனது மகனுக்கு பாதி விடுதலை கிடைத்தது போல இருக்கிறது. பேரறிவாளன் வருகிற பொங்கலுக்குள் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்