

ஆர்.கே.நகர் தேர்தலில் பா.ஜ.கவை விட நாம் தமிழர் கட்சி அதிகமான வாக்குகளை பெற்று உள்ளது,
நோட்டோவிற்கு அதிகமான வாக்குகள் கிடைத்து உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி அக்கட்சியின் செயல்பாட்டை விமர்சனம் செய்து உள்ளார்.
சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் பதிவிட்டு உள்ள செய்தியில், “தமிழகத்தில் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது. மத்தியில் ஆளும் தேசியக்கட்சிக்கு இடைத்தேர்தலில் நோட்டோவிற்கு கிடைத்த வாக்குகளில் கால்வாசி மட்டுமே கிடைத்து உள்ளது. இது பொறுப்பை உணர வேண்டிய தருணம்,” என குறிப்பிட்டு உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.